இலங்கையில் டிட்வா சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது
2004 சுனாமியை நினைவூட்டும் வகையிலான இதயத்தை பிழியும் காட்சிகள் இப்போது இலங்கை முழுவதும் வெளிவருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் முன்னர் துண்டிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
